Thursday 2nd of May 2024 07:42:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிரேசிலை விடாது துரத்தும்  கொரோனா;  நேற்றும் 1,556 பேர் பலி; 52,789 பேருக்கு தொற்று!

பிரேசிலை விடாது துரத்தும் கொரோனா; நேற்றும் 1,556 பேர் பலி; 52,789 பேருக்கு தொற்று!


கொரோனா வைரஸ் தொற்று நோயை பல நாடுகள் ஓரளவு கட்டுக்குக்குள் வைத்துள்ள போதும், தொற்று நோயின் ஆரம்பம் முதலே பிரேசில் பெரும் அழிவுகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது.

நேற்று ஒரு நாளில் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,556 பேர் உயிரிழந்ததுடன், 52,789 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-ஆவது இடத்திலும் பிரேசில் உள்ளது.

இந்நிலையில் நேற்று பதிவான புதிய தொற்று நோயாளர்களுடன் பிரேசிலில் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 1 கோடியே 92 இலட்சத்து 62 ஆயிரத்தைக் அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா மரணங்களும் 5 இலட்சத்து 39 ஆயிரத்தைக் கடந்துள்ளன.

இதேவேளை, அங்கு தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 79 இலட்சத்து 17 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 8 இலட்சத்து 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தொற்று நோயுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பிரேசில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE